40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கே ஆதரவு - புரட்சி பாரதம் அறிவிப்பு

71425பார்த்தது
40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கே ஆதரவு - புரட்சி பாரதம் அறிவிப்பு
40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வரும் புரட்சி பாரதம் கட்சிக்கு மக்களவை தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா இல்லையா என கட்சியினருடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதாக ஜெகன்மூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். ஆனால் தொண்டர்கள் கூறியதால் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என தற்போது அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி