பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்.. கர்நாடகாவில் பரபரப்பு

51பார்த்தது
பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்.. கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெயேஷ் புஜாரி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், ஜெயேஷ் புஜாரி மீதான ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக பெலகாவியில் உள்ள கோர்ட்டுக்கு இன்று போலீசார் அழைத்து வந்தனர். அப்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என ஜெயேஷ் புஜாரி முழக்கங்களை எழுப்பினான். இதனைத் தொடர்ந்து சுற்றியிருந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவனை தாக்கினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெயேஷ் புஜாரியை போலீசார் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி