அத்துமீறலுக்கு ஆதரவு.. பிரதமர் கண்டனம்

587பார்த்தது
அத்துமீறலுக்கு ஆதரவு.. பிரதமர் கண்டனம்
மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற எம்.பிக்கள் நூற்றுக்கணக்கானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் செயலை ஆதரிக்கும் விதத்தில் பேசுவது, நாடாளுமன்றத்தின் விதிமீறலைப்போலவே ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள், விரக்தியில் நாடாளுமன்றத்தைச் சீர்குலைக்கின்றன என கூறியுள்ளார். பாஜகவினர் அமைதியையும் நிதானத்தையும் இழக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.