PF பணத்தை தராததால் தற்கொலை - பரபரப்பு

64பார்த்தது
PF பணத்தை தராததால் தற்கொலை - பரபரப்பு
வருங்கால வாய்ப்பு நிதி என்பது வேலை செய்பவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு சேமிப்பாகும். இதனை பணத்தேவை ஏற்படும்போது நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் தனது வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விண்ணப்பத்தை நிராகரித்ததால் சிவராமன் என்பவர் அலுவலக வாயிலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் நோயாளியான சிவராமனின் PF கணக்கில் ரூ. 80,000 இருந்துள்ளதாகவும், அவரின் விண்ணப்பத்தை வேண்டுமென்றே அதிகாரி நிராகரித்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி