“திடீர் திடீரென உயரும் விமான டிக்கெட் விலை” - தயாநிதி ஆவேசம்

69பார்த்தது
தனியார் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை திடீர் திடீரென உயர்த்துவதாக மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றம் சாட்டினார். "சென்னையில் இருந்து டெல்லி செல்ல Vistara விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முதலில் ரூ.33,000 செலுத்த முயன்றபோது Error என வந்தது, அடுத்த நொடியே ரூ.93,000ஆக உயர்த்திக் காட்டியது. இதனை பயணிகள் விமானங்கள் ஒழுங்காற்று அமைப்பு தீர்ப்பதில்லை" என்றார். இது கண்காணிக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உறுதியளித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி