கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பால் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் - கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.டெக் இறுதியாண்டு மாணவர் ஒருவர் சி.எம்.ஆர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.