பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்துடன் தொடக்கம்!

51பார்த்தது
பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்துடன் தொடக்கம்!
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் புதன்கிழமை பெரும் ஏற்றத்துடன் தொடங்கி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலை 9.15 மணியளவில், சென்செக்ஸ் 351.89 புள்ளிகள் உயர்ந்து 71,789.08 ஆகவும், நிஃப்டி 105.40 புள்ளிகள் உயர்ந்து 21,558.50 ஆகவும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் விப்ரோ, இன்ஃபோசிஸ், என்டிபிசி மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் லாபத்தில் இருந்தபோதும், மாருதி சுஸுகி மட்டும் நஷ்டமடைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.18 ஆக இருந்தது.

தொடர்புடைய செய்தி