நாளை (மார்ச்.29) பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.