தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியை சேர்ந்த விவசாயி திருமலை, தனது சகோதரர கணேசன், ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரை காணவில்லை எனவும் கண்டுபிடித்து தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு கால கட்டங்களில் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்குகளை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.