
சிவகங்கை : தூய்மைப்பணிகள் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட 5 பொது இடங்களில் தூய்மைப் பாரதம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மைப்பணிகள் தொடர்பாக, டி. புதூர் கிருஷ்ணாநகர் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கா. வானதி அவர்கள், ஆணையாளர் ரமேஷ்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. அருள்பிரகாசம் (கி. ஊ) மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலாளர், சுகாதார கள ஊக்குனர், தூய்மைக்காவலர்கள் ஆகியோர் உள்ளனர்.