சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கன்னிமூல விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் அலங்காரம் செய்து பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.