மலைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் திருஞானம். இவரது தென்னந்தோப்பு தென் சிங்கம்புணரி பகுதியில் உள்ளது. தோப்பு வீட்டு முன் பகுதியில் உரித்த தேங்காய் மட்டைகளை நீண்ட நாட்களாக குவித்து வைத்திருந்தனர்.

இன்று (செப்.,19) தென்னை மட்டைகளை அள்ளி கொண்டிருக்கும் போது உள்ளே பெரிய மலைப்பாம்பு இருப்பதை கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர்.

அங்கு ஏதே ஒரு பொருளை விழுங்கி விட்டு நகர முடியாமல் அதே இடத்தில் கிடந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பை போராடி பிடித்து சாக்கு பைக்குள் போட்டு தீயணைப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

தொடர்புடைய செய்தி