சாலை விபத்தில் 2 பெண்கள் பலி

74பார்த்தது
சாலை விபத்தில் 2 பெண்கள் பலி
ஈரோட்டை சேர்ந்த கலைச்செல்வன் (26), நேற்று (அக் 07) கோவைக்கு செல்ல காரில் புறப்பட்டுள்ளார். அப்போது கலைச்செல்வனின் நண்பர் தனக்கு தெரிந்த சௌந்தர்யா (26), ரிஸ்வானா (20) ஆகிய இருவரை கோவையில் விடச்சொல்லியுள்ளார். இந்நிலையில் மூவரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது வில்லரசம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் சௌந்தர்யா மற்றும் ரிஸ்வானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கலைச்செல்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி