மக்கள் திமுகவிற்கு ஓட்டு போடுகின்றனர்: மாஜி அமைச்சர் வேதனை

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், பேரறிஞர் அண்ணா மதுவிலக்கினை ஆதரித்தவர். ஆனால் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, கூட்டணி கட்சியினரை வைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வியப்பாக உள்ளது.

முறைத்தால் வெட்டுவான் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் கஞ்சா போதை வஸ்துகள் அதிகரித்து உள்ளது. ஆசிரியர் கண்டித்தால் அவர்களது வாகனங்களை சேதப்படுத்துவதும், மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில் மாணவர்களை எல்லாம் போதை அடிமைகளாக ஆக்கிவிடுவார். இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்துவிட்டனர். வெற்றி பெற்றவர்கள் தொகுதி பக்கம் வருவதே கிடையாது. நாங்கள் தான் நல்லது கெட்டது அனைத்து நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கின்றோம். ஆனால் மக்கள் ஓட்டு போடுவது திமுகவினருக்கு என வேதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி