சைரன் ஒலி எழுப்பிய பறவைகள் - பதறிப்போன போலீஸ்

51பார்த்தது
இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் பள்ளத்தாக்கு என்னும் பகுதியில் உள்ள சாலையில் சைரன் ஒலி எழுப்பியபடி வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்த போலீசார் சாலையில் பார்த்தபோது அங்கு எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் சுற்றிமுற்றிப் பார்த்தபோது மரத்தின் மீது ஸ்டார்லிங் என்ற பறவைகள் இருந்தது தெரியவந்தது. இந்த பறவைகள் தான் சைரன் ஒலி எழுப்பியதும் தெரியவந்தது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி