அமெரிக்காவின் மேரிலாந்தில் கடந்த 2015-ல் பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல் என்பவர் தனது மனைவி பாலக்கை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நிலையில் அதிகாரிகளால் இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லை. நீதிமன்றம் பத்ரேஷ்குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்த போதும் அவர் குறித்த தகவல் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தேடப்படும் குற்றவாளியான அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2.1 கோடி மதிப்பிலான பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.