தேனியில் நடிகை ரோஜா சிறப்பு தொழுகை

588பார்த்தது
தேனியில் நடிகை ரோஜா சிறப்பு தொழுகை
ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது கணவர் இயக்குநர் செல்வமணியுடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார். கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. 1950ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தர்ஹாவிற்கு ரோஜா மற்றும் செல்வமணி ஆகியோர் சென்ற சுமார் 15 நிமிடம் தொழுகை செய்தனர். அப்போது, செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டை கட்டி தொழுகை செய்தார். பின்னர், அங்கிருந்து அவர்கள் காரில் புறப்பட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி