நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியது. இந்த நிலையில், சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.