இந்தியாவையே உலுக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தாமாக முன்வைத்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். தலைமறைவாக இருக்கும் பிரஜ்வாலை உடனடியாக கைது செய்து, வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பிரஜ்வால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.