சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்தது. சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (மார்ச்28) முடிவடைகிறது. இந்நிலையில் சிறையில் இருந்து காணொலி மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிவில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.