செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை விசாரணை

44100பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை விசாரணை
செந்தில் பாலாஜி ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார். சட்ட விரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தில் ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் விசாரணையின்போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். இதனால் அவருக்கு இந்த முறை ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி