பைக் பஞ்சராகி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

55பார்த்தது
பைக் பஞ்சராகி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
வண்டலூரில் பைக் பஞ்சராகி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வரதராஜபுரம் அருகே 12ம் வகுப்பு மாணவர்கள் ஒட்டிச் சென்ற பைக்கின் டயர் பஞ்சர் ஆகி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்து சென்ற சூர்யா (17) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பைக்கை ஓட்டிய ஹர்ஷவர்தன் (17) படுகாயமடைந்தார். இதையடுத்து, 18 வயது நிரம்பாத சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக ஹர்ஷவர்தனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி