சல்மான் கான் மிரட்டல் வழக்கு: காய்கறி வியாபாரி கைது

80பார்த்தது
சல்மான் கான் மிரட்டல் வழக்கு: காய்கறி வியாபாரி கைது
நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஷேக் உசேன் ஷேக் மவுசின் (24) என்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி