தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

56பார்த்தது
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அங்கு கூட்டம் அலைமோதி காணப்படும். அந்தவகையில் நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) கிருஷ்ணஜெயந்தியையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையாகும்.

இதனால் தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், படகு குழாம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டு இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். பலர் குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர். மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

தொடர்புடைய செய்தி