ஒயர் திருட முயன்ற சிறுவன் கைது

76பார்த்தது
ஒயர் திருட முயன்ற சிறுவன் கைது
சேலம் களரம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர தாஸ் (வயது 50). இவரது சகோதரர் காமராஜ். இவர், அப்பகு தியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் வீட் டின் முன்பு வைத்திருந்த எலக்ட்ரிக் காப்பர் ஒயர் மற்றும் ஆழ்துளை குழாய் ஒயர்களை 3 சிறுவர்கள் திருட முயன்ற னர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ், பொதுமக் களின் உதவியுடன் ஒரு சிறுவனை பிடித்து கிச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். 2 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒயர்களை திருட முயன்றது கிச்சிப்பாளையம் சுண்ணாம்புசூளை பகு தியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறு வனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்த னர். மேலும், தப்பி ஓடிய மற்ற 2 சிறுவர்களையும் தேடி வரு கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி