ஓடையில் தவறி விழுந்து மூதாட்டி பலி

68பார்த்தது
ஓடையில் தவறி விழுந்து மூதாட்டி பலி
வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது75). இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஓடையில் பழனி யம்மாள் தவறி விழுந்தார். ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றதால் அதில் அவர் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி