இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையம் அருகே புளியமரத்தால் அபாயம்.

2952பார்த்தது
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையம் அருகே சின்னப்பம்பட்டி சாலை பகுதியில் 50 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த புளிய மரம் 1-ம் தேதி இரவு அடித்த சூறாவளி காற்றால் புளியமரம் அடி வேறு உடைந்து சாய்ந்த நிலையில் எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் பயணிகளும், பேருந்து நிலையம் வரும் பயணிகளும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர். இதனை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக ஆய்வு செய்து மரத்தினை அப்புறப்படுத்தி சீர் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி