வீரபாண்டி ஆசிரியர் மீது புகார் விசாரணை பெற்றோர்கள் காரசாரம்.

60பார்த்தது
சேலம் , வீரபாண்டி வட்டாரம், கல்பாரப்பட்டி, புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் மீது  வீரபாண்டி ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் (பாமக) மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரிக்க வந்த அதிகாரியிடம் கவுன்சிலர் மணிவண்ணனுக்கு எதிராக சிலர் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஆசிரியர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரிக்க தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு, வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர்கள் அன்பழகன், ஞானசேகர் உள்ளிட்டோர் புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நேரில் விசாரிக்க வருகை புரிந்தனர். இதனை அறிந்த  பெற்றோர்கள் தவறான புகாரை பாமகவை சேர்ந்த கவுன்சிலர் அளித்துள்ளார் என தெரிவித்தனர். இதில் ஒரு சிலர் சரியான முறையில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் பாடம் கற்பிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர். விசாரணைக்கு வந்த அதிகாரி கூறுகையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட புகாரை  விசாரணை செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை வழங்க உள்ளதாக  தெரிவித்தனர். விசாரணை செய்ய வந்த அதிகாரிகள் மாணவ , மாணவிகளின் பெற்றோர்கள் அல்லாமல் அரசியல் கட்சியினருக்கு முக்கிய தத்துவம் கொடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி