இரு சக்கர வாகனம் திருட்டு இருவர் கைது

61பார்த்தது
இரு சக்கர வாகனம் திருட்டு இருவர் கைது
சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றதாக இருவரை சங்ககிரி போலீசார் கைது செய்து விசாரணை.

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் பல்வேறு இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது.

அதனையடுத்து சங்ககிரி உள்கோட்ட காவல்துணைகண்காணிப்பாளர்னராஜா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் சேலம், செட்டிக்காடு, கோரிமேடு, சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ராஜ்குமார் (32), சேலம் மாவட்டம், தீவட்டிபட்டி, சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குமார் (42) இருவரையும் கைது செய்து ஒரு இரண்டு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி