மகளின் பிறந்தநாளுக்கு கணவர் வராததால் தகராறு மனைவி தற்கொலை

79பார்த்தது
மகளின் பிறந்தநாளுக்கு கணவர் வராததால் தகராறு மனைவி தற்கொலை
சேலம் அம்மாப்பேட்டை சலேது நாயக்கர் காடு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர், தனியார் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி யுவராணி (வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2-ந் தேதி குருமூர்த்தி வேலை சம்பந்தமாக ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வேலை முடிந்து கடந்த 4-ந் தேதி வீட்டிற்கு வந்த குருமூர்த்தியிடம் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு வராதது குறித்து யுவராணி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த யுவராணி அதிக மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி