சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் கால்நடை சந்தை அமைந்துள்ளது் இந்த கால்நடை சந்தை தமிழகத்தில் பெரிய சந்தைகளில் இதுவும் ஒன்றாகும் இங்கே வீரகனூர் தலைவாசல் கெங்கவல்லி ஆத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்,
சேலம் நாமக்கல் ஈரோடு கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருச்சி பகுதியில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி வீரகனூர் கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில்
இதில் செம்மறி ஆடு, தலைச்சேரி ஆடு, நாட்டினம் ஆடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் ஒரு ஆடு 3500 முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் இரண்டு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்