செஞ்சிலுவை சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு

50பார்த்தது
செஞ்சிலுவை சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு
செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப, அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் கூட்டம் 16. 08. 2024 அன்று மாலை 04. 30 மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேற்படி பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத உறுப்பினர்கள், தங்களுடைய உறுப்பினர்கள் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் பரிசீலனை செய்ய ஏதுவாக அவற்றை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் 20. 09. 2024-ஆம் தேதிக்குள் நேரில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி