சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் இருந்து கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கு ஏழாம் நம்பர் அரசு பேருந்து நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது கெங்கவல்லி பகுதிக்கு வரும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் டயர் வெடித்து அரசு பேருந்து பாதி வழியிலேயே நின்றது. பயணிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், பெண்கள் கைக்குழந்தைகளுடன் நடந்து சென்று கெங்கவல்லி பகுதிக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.