சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் ஜெய்வின்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

63பார்த்தது
சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் ஜெய்வின்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் சி. பி. எஸ். இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பிடித்து சாதித்து உள்ளனர். அந்த வகையில் பள்ளிக்கூட அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 484 மதிப்பெண் பெற்று மாணவி வி. எஸ். தியா முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் எஸ். பவின்ஆதித்யா 477 மதிப்பெண்ணும், டி. ஜெ. சேனாஸ்ரீ 476 மதிப்பெண்ணும் பெற்று முறையே 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்தனர்.
பத்தாம் வகுப்பு ெபாதுத்தேர்வில், மாணவி பி. பிரனாவதாரணி 500-க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவிகள் எஸ். ஹன்சிகா, ஜெ. டி. ரிதன்யா ஆகியோர் 483 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவர் எஸ். கே. லோகித்சரண் 481 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தாளாளர் இளவரசு, செயலாளர் இளையராஜா, நிர்வாகி அன்புராணி இளவரசு, வனிதா இளையராஜா, முதல்வர் கிறிஸ்டோபல் ஜெர்மி, நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகள் அளித்தும், சால்வை அணிவித்தும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி