சீமான் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமராக்கள் கண்காணிக்கும் வகையிலான மொபைல் கேமரா கண்ட்ரோல் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் நடந்தால் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.