செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் செல்வக்குமாருக்கு ரயில்வே துறை சார்பில் ரூ.5,000 சன்மானம் வழங்கி பாராட்டு உள்ளனர். தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக தாதன் குளம் அருகே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதை பார்த்த செல்வக்குமார், உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ஸ்ரீவைகுண்டத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கியுள்ளது ரயில்வே துறை.