உணவு கேட்டரிங் தொழில் தொடங்கும் பெண்களுக்காக மத்திய அரசு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், ஃப்ரிட்ஜ், கேஸ் இணைப்பு, டைனிங் டேபிள் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தகுதியுடையவர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.