தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் இன்று காலை தமிழ்நாடு திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பயணத்தில், ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தமிழ்நாடு தனிப் பாதையில் பயணிப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் பாராட்டியுள்ளது எனவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.