வலி நிவாரண மாத்திரை போதை மருந்தாக விற்பனை!

586பார்த்தது
வலி நிவாரண மாத்திரை போதை மருந்தாக விற்பனை!
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பேன்ஸி ஸ்டோரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடையின் உரிமையாளரான ராஜஸ்தானைச் சேர்ந்த பரத்குமார் பிடிபட்டுள்ளார். இவரின் உறவினரான குஜராத்தை சேர்ந்த தினேஷ், இதற்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவர, அவரை போலீசார் தேடி வருகின்றனர். இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி