ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

57பார்த்தது
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை (பிப்.07) புதன்கிழமை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். குஜராத் மாநிலம் ஜமாநகரில் உள்ள கோவானா கிராமத்தில் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குடும்பத்தினர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றை சுற்றி குழி தோண்டி சிறுவன் வெளியே எடுக்கப்பட்டான். சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சிறுவன் நலமுடன் இருக்கிறான்.

தொடர்புடைய செய்தி