அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அஞ்சலி மற்றும் பிகாஷ் ஷா இருவரும் காதலர்கள். அஞ்சலிக்கு சந்தீப் குமார் (44) என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து சந்தீப் மிரட்டி வந்துள்ளார். இதனால், சந்தீப்பிடம் இருந்து அந்த புகைப்படங்களை பெறுவதற்காக திட்டம் தீட்டி 5 ஸ்டார் ஓட்டலுக்கு வரவைத்து சந்தீப்பை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். அஞ்சலி, பிகாஷ் ஷா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.