பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு பிடிஎம் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் தீபக் திலக் என்பவர் நிறுவனம் நடத்தி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளார். முதலீடு செய்தவர்களுக்கு முதலில் சில மாதங்கள் மட்டும் பணத்தை திருப்பி தந்த நிலையில் மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்.