கறிக்கடையில் குழந்தை தொழிலார் மீட்பு

84பார்த்தது
கறிக்கடையில் குழந்தை தொழிலார் மீட்பு
ஈரோடு சூளை பாரதி நகரில் சத்தியமங்கலம் பிரதான சாலையில் உள்ள கறிக் கடையில், சிறுவன் பணியில் இருப்பதாக 1098 என்ற குழந்தைகள் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் 14 வயது நிரம்பாத சிறுவன் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 6ம் வகுப்பு வரை மட்டுமே பயின்று பள்ளியிலிருந்து இடைநின்ற சிறுவன், பல மாதங்களாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டார். மேலும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி