மதம் வேறு, அரசு வேறு கேரளா முதல்வர் கருத்து

76பார்த்தது
மதம் வேறு, அரசு வேறு கேரளா முதல்வர் கருத்து
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவுற்றதை அடுத்து கேரளா முதல்வரை பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதத்துக்கும் அரசுக்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியதாகக் காணப்படுகிறது. இது கவலை அளிக்கிறது. மதம் வேறு; அரசு வேறு. இரண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியுள்ளார். தற்போதைய போக்கு அவர் அளித்த உறுதிமொழிக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார். மேலும் மற்ற மதங்களுக்கு மேலாக ஒரு மதத்தை உயர்த்தவோ, மற்ற மதங்களுக்கு கீழாக ஒரு மதத்தை தாழ்த்தவோ கூடாது என கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி