ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை மரங்கள் சில உள்ளன. நேற்று காலை 11: 00 மணிக்கு பலத்த காற்று வீசியதில் தென்னை மரம் சாய்ந்தது.
தாலுகா அலுவலகத்திற்கு வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மரம் அகற்றப்பட்டது.