கடலாடி அருகே பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு.!

3641பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ‘சவேரியார் பட்டினம்’ கிராமத்தைச் முன்னாள் ராணுவ வீரர் ‘குழந்தை’ என்பவர் தொழிலுக்காக. அருகே உள்ள மாரந்தை கிராமத்திற்கு தனது ஜேசிபி இயந்திரத்துடன் சென்றபோது ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகானந்தம் என்பவரின் ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல் முன்னாள் ராணுவ வீரர் குழந்தையை அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முருகானந்தம் என்பவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் பணிபுரிவதால் ‘குழந்தை’ கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சவேரியார்பட்டிணம் கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பி ‘சின்ன கண்ணு’ கிராமங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், பேச்சு வார்த்தையில் எந்தவித பலனும் எட்டாத நிலையில், கிராம மக்கள் கிராமத்துக்குள்ளேயே அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி பதாகைகளையும் கருப்பு கொடியுடனும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி