அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட தயங்கும் பக்தர்கள்.!

61பார்த்தது
அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட தயங்கும் பக்தர்கள்.!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்னிந்தியாவின் காசி என்று போற்றப்படும் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படுவதால் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தை விட வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலின் பெருமைகளை அறிந்து இங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கிறார்கள்.

மேலும் அக்னி தீர்த்த கடற்கரையோரம் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபாடு நடத்துபவர்கள் விதிகளை மீறி தங்களுடைய ஆடைகளையும் கடலிலும், ஆங்காங்கேயும் விட்டு செல்வதால் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் முகம் சுழிக்க வைப்பதாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி