பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டம்.!

55பார்த்தது
பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டம்.!
பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும். எந்த அரசு வந்தாலும் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்குவது பரமக்குடி. வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நகரமாகும். நகராட்சியில் 36 வார்டுகளை கொண்டது.

இங்கு கைத்தறி நெசவாளர்கள், வணிகர்கள், கூலி தொழிலாளர்கள் நிறைந்து வாழும் பகுதியாகும். ஒவ்வொரு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்பது அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியாகவும் அதை நிறைவேற்றாமல் போவதும் தொடர்கதையாக தான் உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் என்பது பரமக்குடி மக்களுக்கு கனவாகவும் கானல் நீராகவும் இருந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் பரமக்குடி நகரில் மழைக்காலங்களில் மழை நீரும் சாக்கடை நீரும் ஒன்றாக கலந்து நகரில் பல்வேறு இடங்களில் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள், புழுக்கள், கிருமிகள் உற்பத்தியாகி காய்ச்சல், உள்பட பல்வேறு தொற்றுநோய் பரவும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி