காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர்
கனகராஜ் பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் செந்தில் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்: - தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாகவும் மீனவர்களுக்கு பயனில்லாத கச்சத்தீவை மீட்போம் என்று கூறி வருகின்றனர். 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் கன்னியாகுமாரி அருகில் வாட்ச் பேதன் என்ற மீன்வளம் அதிகம் உள்ள பகுதியை பெற்றுத் தந்தார். அதை புரிந்து கொள்ளாமல் அதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடி வருகிறது என்று கூறினார். மேலும் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா போராடிவரும் மீனவர்களை கண்டு கொள்ளாமல் சீமானின் கோப்புகளை உடனடியாக எனக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.