ராமலிங்க பிரதிஷ்டை விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

51பார்த்தது
ராமலிங்க பிரதிஷ்டை விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூன் 16) கோயிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு ஸ்நான கலச பூஜை நடைபெற்றது. பின்னர் கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி, ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.தொடர் விடுமுறை காரணமாக கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்தி